மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இது போன்ற வீடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறை இறங்கி உள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதற்கு டில்லி இணையதள குற்ற காவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், ‛இந்த டீப் பேக் வீடியோ சம்பந்தமாக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், மெட்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து இதை கண்டறியும் தகவல்கள் பெறப்பட்டு தொழில்நுட்ப ஆய்வு நடைபெற்று வருவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.