'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி ஆபாச வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து இது போன்ற வீடியோக்களை வெளியிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபர்களை கண்டறியும் முயற்சியில் காவல்துறை இறங்கி உள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதற்கு டில்லி இணையதள குற்ற காவல் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில், ‛இந்த டீப் பேக் வீடியோ சம்பந்தமாக நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. மேலும், மெட்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து இதை கண்டறியும் தகவல்கள் பெறப்பட்டு தொழில்நுட்ப ஆய்வு நடைபெற்று வருவதாகவும்' தெரிவிக்கப்பட்டுள்ளது.