த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் |
இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் மீரா சில நாட்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து விஜய் ஆண்டனி குடும்பம் மீளமுடியாமல் தவிக்கிறது. அண்மையில் நடந்த 'ரத்தம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்குகூட தனது இளைய மகள் லாராவுடன் வந்தார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் “ எங்களுடன் நீ 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும், நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா. லாரா (தங்கை) உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். லவ் யூ தங்கம்” என பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவு படிப்பவர்களை கலங்கை வைக்கிறது.