திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
இசை அமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர், எடிட்டர் என பன்முகம் கொண்டவர் விஜய் ஆண்டனி. அவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் மீரா சில நாட்களுக்கு முன்பு மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து விஜய் ஆண்டனி குடும்பம் மீளமுடியாமல் தவிக்கிறது. அண்மையில் நடந்த 'ரத்தம்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்குகூட தனது இளைய மகள் லாராவுடன் வந்தார்.
இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமா விஜய் ஆண்டனி தனது டுவிட்டரில் உருக்கமாக பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் “ எங்களுடன் நீ 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வாய் என்று தெரிந்திருந்தால் உன்னை என் அருகில் மட்டும்தான் வைத்திருப்பேன். அந்த சூரியனையும், நிலவையும் கூட உனக்குக் காட்டியிருக்க மாட்டேன். நான் தினமும் உன் நினைவால் இறந்து கொண்டிருக்கிறேன். நீ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை. அம்மா, அப்பாவிடம் திரும்பி வா. லாரா (தங்கை) உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். லவ் யூ தங்கம்” என பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவு படிப்பவர்களை கலங்கை வைக்கிறது.