ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச் | ரீல் அல்ல ரியல் : விபத்து ஏற்படுத்திய லாரியை சேஸிங் செய்து மடக்கிய நவ்யா நாயர் | விஜய் தவறான ரூட்டில் செல்கிறார் - மோகன்.ஜி வருத்தம் | ரூ.70 கோடி பட்ஜெட் படத்தில் ஆர்யா | இறுதிகட்ட கங்குவா பணியில் இணைந்த சூர்யா | விடாமுயற்சி படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மீதம் | 'எமர்ஜென்சி' விவகாரம் : கங்கனாவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ் | பிளாஷ்பேக்: முதல் ஆக்ஷன் ஹீரோயின் | ஹிட்லர் கருத்து சொல்ல மாட்டார்: விஜய் ஆண்டனி | புற்று நோயாளிகளுக்கு உதவ இசை நிகழ்ச்சி நடத்தும் பரத்வாஜ் |
மலையாளத்திலிருந்து ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்கிற படத்தில் நடித்துள்ளார். இன்னொரு பக்கம் தெலுங்கில் இயக்குனர் மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ராஜா டீலக்ஸ் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மாளவிகா மோகனன். அந்த வகையில் அவரிடம் ஒரேநாளில் ஷாரூக்கானின் டங்கி மற்றும் பிரபாஸின் சலார் என இரண்டு படங்கள் வெளியாகிறதே.. நீங்கள் எந்த படத்தை பார்ப்பீர்கள்.. ஏதோ ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் என ரசிகர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன், ஷாரூக்கானின் படம் பிடிக்கும் தான் என்றாலும் சலார் படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று பதில் அளித்தார். அடுத்து அவர் பிரபாஸ் ஜோடியாக நடிப்பதால் சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.