எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சித்தார் தயாரித்து, நடித்த படம் 'சித்தா'. குழந்தைகள் பாலியல் பலாத்கார பின்னணியில் உருவாகி உள்ள இந்த படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் புரமோசனுக்காக பல ஊர்களுக்கு சென்று வருகிறார் சித்தார்த். அப்படி அவர் பெங்களூரு சென்றபோதுதான் கன்னட அமைப்பினரால் வெளியேற்றப்பட்டார். இதற்காக கன்னட நடிகர்கள் பிரகாஷ்ராஜூம், சிவராஜ்குமாரும் மன்னிப்பு கேட்டனர். இந்த நிலையில் படத்தின் நன்றி அறிவிப்பு விழாவை நேற்று சென்னையில் நடத்தினார்.
விழா முடிவில் இதுகுறித்து சித்தார்த் நிருபர்களிடம் கூறுகையில், “சித்தா படத்தை நான்தான் தயாரித்தேன். எனது வாழ்வாதாரத்துக்காக இந்த படத்தை புரமோட் செய்ய, பெங்களூரில் ஒரு சிறு ஆடிட்டோரியத்தை வாடகைக்கு எடுத்து செய்தியாளர்களை சந்தித்தேன். நான் பத்திரிகையாளர்களை சந்தித்த அன்று அங்கு பந்த் இல்லை. மறுநாள்தான் பந்த் அதனால் மறுநாள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தேன்.
எனது நிகழ்ச்சியை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால் பத்து பேர் திடீரென வந்து ரகளை செய்து, செய்தியாளர்கள் சந்திப்பை நிறுத்தியது, எனது வயிற்றில் அடித்தது போல் இருந்தது. காசு போட்டு பணம் எடுக்கத்தான் நாங்கள் சினிமா தயாரிக்கிறோம். இதுபோல் எங்கள் வயிற்றில் அடிக்கலாமா? மற்ற தயாரிப்பாளர்களுக்கு இதுபோல் நடக்கக் கூடாது என்பதற்காகவே இதை சொல்கிறேன்.
கன்னட மக்களுடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. கன்னட திரையுலகினருடனும் பிரச்னை இல்லை. அப்போது ஏன் இந்த 10 பேர் மட்டும் என்னை தடுக்க வேண்டும்? இந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்ட சிவராஜ்குமாருக்கும் பிரகாஷ்ராஜிற்கும் நன்றி” என்றார்.