மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு |
சென்னை : படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம், காவிரி தண்ணீர் பிரச்னை தொடர்பான கேள்வி எழுந்தபோது பதிலளிக்காமல் நழுவி சென்றார்.
தமிழகம் - கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையே காவிரி தொடர்பான பிரச்னை பல காலமாக நீடித்து வருகிறது. சமீபத்தில் இந்த பிரச்னை மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, அங்குள்ள கன்னட அமைப்பினர், கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயிலர் பட வெற்றிக்கு பின் நடிகர் ரஜினி அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தனது 170 படத்தில் நடிக்க போகிறார். இதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இதன் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛ஜெயிலர் படம் எதிர்பார்த்த வெற்றியை விட மேலயே வந்துள்ளது. இப்போது 170வது படத்திற்காக செல்கிறேன். சமூக கருத்து கொண்ட படமாக பிரமாண்டமாய் 170 படம் உருவாகிறது. இதன்பிறகு 171 படம் தொடங்கும்'' என்றார் ரஜினி.
தொடர்ந்து அவரிடம் காவிரி விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளிக்காமல் நழுவி சென்றார் ரஜினி.
காவிரி பிரச்னை எப்போது வந்தாலும் பெரும்பாலும் மவுனத்தை மட்டுமே பதிலாக அளித்துவிட்டு செல்வார் ரஜினி. ஏதாவது ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக கருத்து சொன்னால் இன்னொரு மாநிலத்தில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பும். அதனாலேயே அவர் மவுனத்தை மட்டுமே பதிலாக கொடுத்து ஜகா வாங்கி விடுகிறார்.