குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் |
தமிழ் சினிமா உலகில் தாங்கள் நடிக்கும் படங்களின் எந்த ஒரு புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வராதவர்களில் முதலிடம் பெறுபவர் நயன்தாரா. சமூக வலைத்தளங்கள் பக்கம் வராமல் இருந்தவர் திடீரென இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய கணக்கை ஆரம்பித்தார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷனை அதில் செய்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி.
அவர் நடித்த முதல் ஹிந்திப் படமான 'ஜவான்' படத்திற்காக மட்டும் ஐந்தாறு பதிவுகளைப் போட்டார். அதே சமயம் அவர் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'இறைவன்' படத்திற்காக போனால் போகிறதென்று ஒரே ஒரு பதிவை மட்டும் போட்டிருந்தார். மற்றபடி அவர் இன்ஸ்டாகிராம் தளத்தை ஆரம்பித்திருப்பது அவரது சொந்த நிறுவனத்தின் புரமோஷனுக்காகத்தான் என்பது பின்னர்தான் தெரிய வந்தது.
மலேசியாவில் நடைபெற்ற அவரது கம்பெனியின் ஆரம்ப விழாவுக்கு கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். நயன்தாரா அவரது நிறுவனத்தின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தவறில்லை. அது போல அவர் நடிக்கும் படங்களின் நிகழ்வுகளுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என திரையுலகில் தெரிவிக்கிறார்கள்.