பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
கன்னடத் திரையுலகத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கென தனி மரியாதை உள்ளது. அவர்கள் குடும்பத்தினர் திரையுலகத்தில் தலையிட்டால் மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவிக்கத் தயங்குவார்கள்.
நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நேற்று பெங்களூருவில் தமிழ் நடிகர் சித்தார்த் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கன்னட அமைப்பினர் வந்து தகராறு செய்து சித்தார்த்தை வெளியேற வைத்தனர்.
அதற்கு கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் நேற்றே வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காவிரி போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கன்னடத் திரையுலகினர் இன்று ஆர்பாட்டம் நடத்தினர். அதில் பேசிய சிவராஜ்குமார், கன்னடத் திரையுலகம் சார்பாக மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்வதாகவும், எல்லா மொழி நடிகர்களுக்கும் கன்னட ரசிகர்கள் வரவேற்பு தருவார்கள். எல்லா மொழிப் படங்களையும் கன்னட ரசிகர்கள் பார்ப்பார்கள்,” என்று தெரிவித்தார்.