ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கன்னடத் திரையுலகத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கென தனி மரியாதை உள்ளது. அவர்கள் குடும்பத்தினர் திரையுலகத்தில் தலையிட்டால் மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவிக்கத் தயங்குவார்கள்.
நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நேற்று பெங்களூருவில் தமிழ் நடிகர் சித்தார்த் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கன்னட அமைப்பினர் வந்து தகராறு செய்து சித்தார்த்தை வெளியேற வைத்தனர்.
அதற்கு கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் நேற்றே வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காவிரி போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கன்னடத் திரையுலகினர் இன்று ஆர்பாட்டம் நடத்தினர். அதில் பேசிய சிவராஜ்குமார், கன்னடத் திரையுலகம் சார்பாக மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்வதாகவும், எல்லா மொழி நடிகர்களுக்கும் கன்னட ரசிகர்கள் வரவேற்பு தருவார்கள். எல்லா மொழிப் படங்களையும் கன்னட ரசிகர்கள் பார்ப்பார்கள்,” என்று தெரிவித்தார்.