9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

கன்னடத் திரையுலகத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமார் குடும்பத்தினருக்கென தனி மரியாதை உள்ளது. அவர்கள் குடும்பத்தினர் திரையுலகத்தில் தலையிட்டால் மற்றவர்கள் அதற்கு எதிர்ப்பு கருத்துக்களைத் தெரிவிக்கத் தயங்குவார்கள்.
நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'ஜெயிலர்' படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். நேற்று பெங்களூருவில் தமிழ் நடிகர் சித்தார்த் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கன்னட அமைப்பினர் வந்து தகராறு செய்து சித்தார்த்தை வெளியேற வைத்தனர்.
அதற்கு கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ் நேற்றே வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காவிரி போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கன்னடத் திரையுலகினர் இன்று ஆர்பாட்டம் நடத்தினர். அதில் பேசிய சிவராஜ்குமார், கன்னடத் திரையுலகம் சார்பாக மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்வதாகவும், எல்லா மொழி நடிகர்களுக்கும் கன்னட ரசிகர்கள் வரவேற்பு தருவார்கள். எல்லா மொழிப் படங்களையும் கன்னட ரசிகர்கள் பார்ப்பார்கள்,” என்று தெரிவித்தார்.