விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளவர் அனில். மம்முட்டி நடித்த 7 படங்களை இயக்கி உள்ளார். அனில் தமிழில் இயக்கி உள்ள படம், 'சாயாவனம்'. தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரித்து வில்லனாக நடிக்கிறார். சவுந்தரராஜா, தேவானந்தா, அப்புக்குட்டி, ஜானகி, வெற்றிவேல் ராஜா, மேத்யூ மம்ப்ரா நடிக்கின்றனர். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பொலி வர்கீஸ் பாடல்களுக்கு இசை அமைக்கிறார். எல்.வி.முத்து கணேஷ் பின்னணி இசை அமைக்கிறார்.
படம் குறித்து அனில் கூறுகையில் ‛‛வருடம் முழுவதும் அதிக மழை பொழியும் அடர்ந்த வனம் சூழ்ந்த ஒரு கிராமத்தில், புது மணப்பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை 'சாயாவனம்' படம் விவரிக்கிறது. இத்தலைப்புக்கு 'அடர்ந்த காடு' என்று பொருள் இருக்கிறது. இது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் குணத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கேரக்டரும் காடு போல் அடர்த்தியானது. அவர்களிடம் பல்வேறு ரகசியங்கள் மறைந்துள்ளன.
திருமணம் நடந்த அன்றே கணவன் காணாமல் போகிறான். தனித்துவிடப்படும் அவள் அந்த மலைகிராமத்தில் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கிறாள், தன் கணவனை அவள் கண்டுபிடித்தாளா? அவனுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் திரைக்கதை. முழு படமும் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் சிரபுஞ்சியில் படமாகியுள்ளது'' என்றார்.