ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளவர் அனில். மம்முட்டி நடித்த 7 படங்களை இயக்கி உள்ளார். அனில் தமிழில் இயக்கி உள்ள படம், 'சாயாவனம்'. தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரித்து வில்லனாக நடிக்கிறார். சவுந்தரராஜா, தேவானந்தா, அப்புக்குட்டி, ஜானகி, வெற்றிவேல் ராஜா, மேத்யூ மம்ப்ரா நடிக்கின்றனர். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பொலி வர்கீஸ் பாடல்களுக்கு இசை அமைக்கிறார். எல்.வி.முத்து கணேஷ் பின்னணி இசை அமைக்கிறார்.
படம் குறித்து அனில் கூறுகையில் ‛‛வருடம் முழுவதும் அதிக மழை பொழியும் அடர்ந்த வனம் சூழ்ந்த ஒரு கிராமத்தில், புது மணப்பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை 'சாயாவனம்' படம் விவரிக்கிறது. இத்தலைப்புக்கு 'அடர்ந்த காடு' என்று பொருள் இருக்கிறது. இது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் குணத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கேரக்டரும் காடு போல் அடர்த்தியானது. அவர்களிடம் பல்வேறு ரகசியங்கள் மறைந்துள்ளன.
திருமணம் நடந்த அன்றே கணவன் காணாமல் போகிறான். தனித்துவிடப்படும் அவள் அந்த மலைகிராமத்தில் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கிறாள், தன் கணவனை அவள் கண்டுபிடித்தாளா? அவனுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் திரைக்கதை. முழு படமும் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் சிரபுஞ்சியில் படமாகியுள்ளது'' என்றார்.