காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி அரவிந்தன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இது குறித்த தகவல் சூர்யாவுக்கு வந்ததை அடுத்து சென்னை எண்ணூரில் அமைந்துள்ள தனது ரசிகர் அரவிந்தன் வீட்டுக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார். அதையடுத்து அரவிந்தனின் பெற்றோரிடமும் நீங்கள் என்ன உதவி கேட்டாலும், அது செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு திருப்பி உள்ளார் சூர்யா. தனது ரசிகருக்கு சூர்யா அஞ்சலி செலுத்திய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.