ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ | மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில் | ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம்: வடிவேலு காமெடி பண்ணுகிறாரா? | பிளாஷ்பேக் : விக்ரமை எதிர்த்து நின்று வெற்றி பெற்ற 'பூக்களை பறிக்காதீர்கள்' |

தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத் தாய் முறை மூலம் கடந்த வருடம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றனர். அக்குழந்தைகளுக்கு உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக் எனப் பெயரிட்டு செல்லமாக உயிர், உலக் என அழைத்து வருகின்றனர். அக்குழந்தைகள் இன்று தங்களது முதல் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றன.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் அவர்களது குழந்தைகளின் புகைப்படங்களைப் பகிர்ந்து, “என் முகம் கொண்ட, என் உயிர் என் குணம் கொண்ட என் உலக்,” எனது அன்பான பையன்களின் புகைப்படங்களுடன் இப்படிப் பதிவிட வேண்டும் என நீண்ட நாட்களாகக் காத்திருந்தேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மை டியர் மகன்களே… உயிர் ருட்ரோநீல், உலக் டைவிக்… இந்த வாழ்க்கையில், எதையும்… எல்லாவற்றையும் தாண்டி.. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உங்கள் இருவர் மீதும் அப்பாவும், அம்மாவும் அன்பு வைத்திருக்கிறோம்.
எங்கள் வாழ்க்கையில் வந்து எங்களை மகிழ்ச்சியாக்கியதற்கு உங்கள் இருவருக்கும் நன்றி… நீங்கள் அனைத்து நேர்மறையானவற்றையும் ஆசீர்வாதங்களையும் கொண்டு வந்துள்ளீர்கள். இந்த ஒரு முழு ஆண்டு வாழ்நாள் முழுவதும் ரசிக்க வேண்டிய தருணங்களால் நிரப்பப்பட்டுள்ளது. உங்கள் இருவருரையும் நேசிக்கிறோம்.
நீங்கள்தான் எங்களது உலகம், எங்களது ஆசீர்வாதமான வாழ்க்கை,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
மகன்களின் முதல் பிறந்தநாளில் அவர்களின் ஒரு வயது போட்டோவை முதன்முறையாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.