ரஜினிக்கு லுக் டெஸ்ட் ; ஜூலையில் கூலி படப்பிடிப்பு : லோகேஷ் அப்டேட் | ரேஸ் காரில் 222 கி.மீ வேகத்தில் சீறி பாய்ந்த அஜித் | அக்டோபர் மாதத்தில் துவங்கும் வாடிவாசல் படப்பிடிப்பு | முத்தையா இயக்கத்தில் அருள்நிதி? | வெங்கல் ராவ்விற்கு சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி | மீண்டும் 'டான்' கூட்டணி : புது அப்டேட் | வசூல் சாதனை படைக்குமா 'கல்கி 2898 ஏடி' ? | தனி விமானத்தில் பேச்சுலர் பார்ட்டி நடத்திய எமி ஜாக்சன் | நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா |
சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளஸ் டூ படிக்கும் மாணவியான அவர் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக் கொண்டார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சோசியல் மீடியா சாட்டிங்கின் போது டீனேஜ் இளைஞர்கள் மனநிலை குறித்தும், அவர்களுக்கு சொன்ன அறிவுரையும் வைரலாகி வருகிறது. இந்த சாட்டிங்கின் போது ரசிகர் ஒருவர், டீனேஜ் இளைஞர்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூறுவீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “பொதுவாகவே இப்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. இதுதான் அவர்களிடையே உள்ள மிக மோசமான எண்ணம். ஆனால் இங்கிருந்து தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இந்த பயணத்தில் நீங்கள் எல்லாவித சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
சில நேரங்களில் இப்படி பயணிக்கும்போது நீங்கள் முன்பு இருந்ததை விட மிக அதிக பலமானவர்களாக கூட மாறுவீர்கள். இது எனக்கே நடந்துள்ளது. 25 வயதுக்கு முன் இருந்த நான் வேறு. இதேபோன்று பல பிரச்சனைகளை சந்தித்து எனது வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட சந்தோசமாக, பலமானவளாக, பாசிட்டிவான நபராக மாறியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.