சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

கானாத்துார் : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நடத்திய தனியார் நிறுவனத்தின் மீது கானாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி இம்மாதம் 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை கானாத்துார் ஆதித்யா ராம் பேலஸ் என்ற தனியார் இடத்தில் நடந்தது. நிகழ்ச்சியை ஏ.சி.டி.சி. ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்தது. போலீசாரிடம் 20000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரியிருந்த நிலையில் 45000க்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தன. அச்சாலையில் வந்த முதல்வரும் வாகன நெரிசலில் சிக்கினார். போலீசார் விசாரணையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பார்வையாளர்களுக்கு அனுமதி சீட்டு விற்றது தெரிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி பார்க்க முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கச்சேரி ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் மீது கானாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பார்வையாளர்களுக்கு முறையான வசதிகள் செய்து தராதது காவல் துறை வழிமுறைகளை மீறி பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக ஐ.பி.சி. 188 406 சட்டத்தின் கீழ் அந்நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.