தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் |
கானாத்துார் : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கச்சேரி நடத்திய தனியார் நிறுவனத்தின் மீது கானாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி இம்மாதம் 10ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை கானாத்துார் ஆதித்யா ராம் பேலஸ் என்ற தனியார் இடத்தில் நடந்தது. நிகழ்ச்சியை ஏ.சி.டி.சி. ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் ஏற்பாடு செய்தது. போலீசாரிடம் 20000 பேருக்கு மட்டுமே அனுமதி கோரியிருந்த நிலையில் 45000க்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்தனர்.
இதனால் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் எழுந்தன. அச்சாலையில் வந்த முதல்வரும் வாகன நெரிசலில் சிக்கினார். போலீசார் விசாரணையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பார்வையாளர்களுக்கு அனுமதி சீட்டு விற்றது தெரிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி பார்க்க முடியாதவர்களுக்கு பணத்தை திருப்பி தரும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் கச்சேரி ஏற்பாடு செய்த தனியார் நிறுவனம் மீது கானாத்துார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பார்வையாளர்களுக்கு முறையான வசதிகள் செய்து தராதது காவல் துறை வழிமுறைகளை மீறி பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக ஐ.பி.சி. 188 406 சட்டத்தின் கீழ் அந்நிறுவனம் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.