பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அண்மையில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். திருமணமாகி ஒருவருடம் மட்டுமே ஆகிய நிலையில் கணவரின் இழப்பு ஸ்ருதி சண்முகப்பிரியாவை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தியது. தொடர்ந்து அந்த இழப்பிலிருந்து தன்னை மீட்டுக்கொள்ள பலவித முயற்சிகளை எடுத்த அவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது மனநிலை குறித்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், தற்போது புதிய பயணத்தை தொடங்கியுள்ள ஸ்ருதி, தனது கணவருடன் நினைவுகளோடு காட்டில் அமைதியை தேடிச் செல்கிறார். வைல்ட் லைப் போட்டோகிராபராக காட்டுக்குள் கேமராவுடன் பயணம் செய்யும் ஸ்ருதி சில புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டு தன்னை துன்பத்திலிருந்து மீள உதவி செய்த பலருக்கும் நன்றி சொல்லியுள்ளார்.