சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் |
தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, நடிகையான ராஷ்மிகா இருவரும் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே கிசுகிசு வெளியாகி வருகிறது. இருவரும் அது பற்றி எதுவும் சொல்லாமலேயே மறைத்து வருகிறார்கள். இதற்கு முன்பு இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மாலத் தீவுக்கு சுற்றுலா சென்றதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில் தற்போது இருவரும் பகிர்ந்த புகைப்படங்களால் காதல் சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. கடந்த வாரம் தனது வீட்டு மாடியில் எடுத்த புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் விஜய் தேவரகொண்டா. நேற்று ராஷ்மிகாவும் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவர் எடுத்த புகைப்படம் விஜய் தேவரகொண்டா வீட்டு மாடி என ரசிகர்கள் மீண்டும் காதல் கிசுகிசுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
ராஷ்மிகா அவரது உதவியாளர் திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் அது. அந்த மண்டபத்தின் மாடி போலவே, விஜய் வீட்டின் மாடியும் இருக்காதா என்றெல்லாம் ரசிகர்கள் யோசிக்கவில்லை. இரண்டும் ஒரே இடம்தான் என்கிறார்கள். இந்த ஜோடி எப்போது தங்களது காதலைப் பற்றி சொல்லப் போகிறது என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.