‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்கி உள்ள படம் 'இறைவன்'. இதில் 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் கதை இதுதான் : ஜெயம்ரவி ஒரு டெரர் போலீஸ் அதிகாரி. கொடூர குற்றங்களை செய்யும் குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை செய்து பின்னர் அவர்களை போட்டுத் தள்ளிவிடுவார். சட்டம் தரும் தண்டனை மிகவும் குறைவாக இருக்கும் என்பது அவரது எண்ணம். இதனால் பல மாறுதல்கள், பதவி இழப்புகளை சந்தித்தவர். அவருக்கு சிறுமிகள், இளம் பெண்களை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ ராகுல் போஸை வேட்டையாடும் அசைன்மெண்ட் தரப்படுகிறது. இதனை அவர் எப்படிச் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஜெயம் ரவியின் மனைவியாக நயன்தாரா நடித்திருக்கிறார். அவருக்கும் சைக்கோ ராகுல் போசுக்கு இருக்கிற ஒரு தொடர்பு சஸ்பென்ஸ்.
தனது முந்தைய படங்களில் மென்மையாண கதை களத்தை கையாண்ட அஹமத் இந்த படத்தில் கொடூர கொலை களத்தை கையில் எடுத்திருக்கிறார். 'ராட்சஷன்', 'போர்த் தொழில்' வரிசையில் ரத்தம் தெறிக்கும் சைக்கோ த்ரில்லர் படமாக படம் உருவாகி உள்ளது.
இதுகுறித்து அஹமத் கூறும்போது “இது மர்டர் மிஸ்ட்ரி சைக்கோ த்ரில்லர் கதை. இதற்கு முன் இந்த சாயலில் பல படங்கள் வந்திருந்தாலும் புதிதாக ஒரு கதையை இதில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். ஜெயம்ரவி இதற்கு முன் பல படங்களில் போலீசாக நடித்திருந்தாலும் இதில் அவர் முற்றிலும் வேற மாதிரியான போலீஸ். நாயகனுக்கு நிகரான கேரக்டர் வில்லன் ராகுல் போசுக்கு. இத்தனை கொடூரமான வில்லனை இதற்கு முன் பார்த்தில்லை என்கிற அளவிற்கு அவரது நடிப்பு இருக்கும். நயன்தாரா கேரக்டர் பற்றி விரிவாக இப்போது சொல்ல முடியாது. படம் வந்ததும் அனைவரையும் அவரது கேரக்டர் ஆச்சர்யப்படுத்தும்” என்றார்.