நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சச்சின் சாவந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தபோது சச்சின் சாவந்த் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நவ்யா நாயரை பார்ப்பதற்காக பலமுறை இவர் கொச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நகைகள் உள்பட விலை மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் நவ்யா நாயரிடம் நேற்று மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினர். மும்பையிலுள்ள நவ்யா நாயரின் வீட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. சச்சின் சாவந்த் தனக்கு நண்பர்தான் என்றும், ஆனால் அவருடன் வேறு விதமான நெருக்கம் எதுவும் கிடையாது என்றும் நவ்யா நாயர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சச்சின் சாவந்துடனான நெருக்கம் பற்றிய ஆவணம் கிடைத்தால் நவ்யா நாயர் கைது செய்யப்படலாம் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.