மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி | அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா | மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்பு | 'டாக்சிக்' படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி | 'வடக்கன்' தலைப்புக்கு சென்சார் எதிர்ப்பு | இயக்குனர் விக்ரமனின் மகனை வாழ்த்திய விஜய், ரஜினி |
பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சச்சின் சாவந்த் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தபோது சச்சின் சாவந்த் முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. நவ்யா நாயரை பார்ப்பதற்காக பலமுறை இவர் கொச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு நகைகள் உள்பட விலை மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் நவ்யா நாயரிடம் நேற்று மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினர். மும்பையிலுள்ள நவ்யா நாயரின் வீட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. சச்சின் சாவந்த் தனக்கு நண்பர்தான் என்றும், ஆனால் அவருடன் வேறு விதமான நெருக்கம் எதுவும் கிடையாது என்றும் நவ்யா நாயர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சச்சின் சாவந்துடனான நெருக்கம் பற்றிய ஆவணம் கிடைத்தால் நவ்யா நாயர் கைது செய்யப்படலாம் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.