ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமாவில் நகமும் சதையுமாக இருந்தவர்கள் எல்ரெட் குமாரும், கவுதம் மேனனும். "விண்ணைத்தாண்டி வருவாயா"வில் இவர்கள் நட்பு பலமானது. அதே நட்பு "நீதானே என் பொன்வசந்தம்" படத்தில் பகையாக மாறியது. படம் கோடிக் கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்த நட்பில் பிளவு ஏற்பட்டு விட்டது. படத்தின் தயாரிப்பாளரான எல்ரெட் குமாருக்குத்தான் நஷ்டமே தவிர இயக்குனர் என்ற முறையில் கவுதம் மேனன் பணத்தை சுருட்டி விட்டதாக கருதினார். இதனால் கவுதம் மேனன் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும், அவரது பார்டனரான ஆர்.எஸ்.இன்போடெயிண்ட் மீதும் வழக்கு தொடர்ந்தர். இதனை கவுதம் மேனன் எதிர்பார்க்கவில்லை. வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கவுதம் மேனன் மீடியாக்களுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதினார். அதில் தனது கடந்த கால சாதனைகளை குறிப்பிட்டிருந்த அவர். சினிமா இயக்கத் தெரிந்த தனக்கு பண விவகாரங்களில் விபரம் இல்லாமல் போய்விட்டது. அதன் காரணமாக எல்ரெட் குமாரிடம் மாட்டிக் கொண்டுவிட்டேன். அவரிடமிருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று எழுதியிருந்தார். இதுகுறித்து எல்ரெட் குமார் அளித்த ஒரு பேட்டியில் "கவுதமும் நானும் சில ஆண்டுகள் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். அவர் நல்ல இயக்குனராக இருக்கலாம். ஆனால் நாணயமான மனிதன் இல்லை என்பதை சமீபத்தில்தான் புரிந்து கொண்டேன். பலகோடி ரூபாய்களை அவர் என்னிடம் மோசடி செய்து விட்டார். நான் எனது சக பார்ட்டனர்களுக்கு பதில் சொல்ல வேண்டாமா? அதனால்தான் நீதிமன்றம் சென்றிருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.