மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? |
பெங்களூரு : பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தான் வேலை பார்த்த அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போவிற்கு சென்று தனது மலரும் நினைவுகளை நினைத்து பரவசமானார்.
ஜெயிலர் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள ரஜினி, அடுத்து தனது 170வது படமாக ‛ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சத்தமின்றி நடந்தது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
சமீபத்தில் தான் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுபயணம் சென்றுவிட்டு திரும்பினார் ரஜினி. இன்று(ஆக., 29) திடீரென பெங்களூரு சென்றார் ரஜினி. அங்குள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு திடீரென விசிட் அடித்தார். அங்குள்ள போக்குவரத்து ஊழியர்களிடம் கலந்துரையாடினார். ரஜினி உடன் போக்குவரத்து ஊழியர்கள் போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார் ரஜினி. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.
ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் தான் கன்டெக்ட்டராக வேலை பார்த்து வந்தார். பழசை மறக்காத ரஜினி அந்த ஞாபகத்தின் அடையாளமாய் இன்று அங்கு சென்று தனது மலரும் நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டார்.