என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
‛அருவி' புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி அவரது 25வது படமாக நடித்துள்ள படம் 'சக்தி திருமகன்'. இப்படம் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "இயக்குனர் சசி என்னிடம் 'பிச்சைக்காரன்' படத்தின் கதையைக் கூறும்போதே கண்களில் நீர் தேங்கியது. அந்தப் படம் சோகமான கதை இல்லை தான். ஆனால், மிகவும் உணர்வுபூர்வமானது. இந்த உணர்வை எனக்கு மீண்டும் ஏற்படுத்தும்படியான இன்னொரு கதையை சசி என்னிடம் கூறியுள்ளார். எங்கள் கூட்டணியில் அந்தப் படம் சீக்கிரம் உருவாகும்" என தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனிக்கு நடிகராக திருப்புமுனையை தந்த படம் பிச்சைக்காரன். அந்தப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெற்றி பெற்றது.