ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சில வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த கவுண்டமணி வாய்மை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீண்டும் பைனான்ஸ் பிரச்னைகள் தீர்ந்து ஆக்சன் சொல்ல தயாராகியிருக்கிறார் இயக்குனர் செந்தில். இந்த படத்தின் படப்பிடிப்பில் கவுண்டமணி இருக்கிறார் என்ற செய்தியை கேள்விபட்டு, சிம்பு, விஷால் உள்பட பல நடிகர்கள் அவரை தேடிச்சென்று சந்தித்தார்களாம். முன்பு போலவே தன்னை சந்திக்க வந்தவர்களிடம் காமெடியாக பேசிக்கொண்டிருந்தாராம் கவுண்டர். அதனால் பத்து நிமிசத்தில் பேசிவிட்டு வந்து விடலாம் என்று சென்றவர்கள்கூட மணிக்கணக்கில் கவுண்டரின் காமெடி பேச்சை தன்னை மறந்து ரசித்திருக்கிறார்கள்.
ஆனால் அப்படி தன்னை சந்திக்க வந்தவர்கள் ஒருவரிடம்கூட எனக்கு உங்கள் படங்களில் சான்ஸ் கொடுங்கள் என்று அவர் கேட்கவில்லையாம். எங்கள் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னபோதுகூட, உங்களுக்கு என் தயவு தேவைப்பட்டால் என்னிடம் வாருங்கள். ஆனால் கவுண்டமணி படமே இல்லாமல் இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுப்போம் என்று என் மீது பரிவு கொண்டு யாரும் சான்ஸ் தர வேண்டாம். அது எனக்கு பிடிக்காது என்று நெத்தியடியாக சொன்னாராம் கவுண்டர்.