திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் திரைப்பட விழாக்கள் சமீப காலங்களில் அதிகமாக நடந்து வருகிறது. உயர் கல்வி படிக்க வரும் கல்விக் கூடங்களில் இப்படியான சினிமா விழாக்களை நடத்துவது குறித்து கல்வியாளர்கள் அவர்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இப்படியான விழாக்களை நடத்துவதற்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களோ, உயர் கல்வித் துறையோ இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரணாவத் மற்றும் பலர் நடிக்க பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் நடைபெற்றது. அப்போது நடிகர், நடிகைகளின் பாதுகாப்புக்காக வந்திருந்த பவுன்சர்கள் அந்த கல்லூரி மாணவர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அப்பாவி மாணவரை ஐந்தாறு பவுன்சர்கள் ஒன்று சேர்ந்து சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவின் லோகோ அடங்கிய டீ ஷர்ட்டுகளை அணிந்து அவர்கள் தாக்கியுள்ளது அந்த நிறுவனத்தின் அத்துமீறல் என பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள். இது குறித்து தயாரிப்பு நிறுவனமோ, அல்லது ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்ளோ எந்த ஒரு அறிக்கையும் தராமல் இருக்கிறார்கள்.
பாதுகாப்பு என்ற பெயரில் பவுன்சர்கள் எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் என கேள்வியும் எழுகிறது. மாணவர்களை அடிக்கும் உரிமையை அவர்களுக்கு யார் தந்தது?. இனிமேலாவது கல்லூரிகளில் திரைப்பட விழாக்களை நடத்த அரசு தடை விதிக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.