மெட்ரோ கூட்டணியில் உருவாகும் ‛நான் வைலன்ஸ்' | உ.பி. அரசின் பிலிம் சிட்டி : டெண்டரில் வெற்றி பெற்ற போனி கபூர் | பெங்களூரு போதை பார்ட்டி : நடிகை ஹேமா உள்ளிட்ட 86 பேர் சோதனை 'பாசிட்டிவ்' | ஹிந்திக்கு ஆதரவாக சூர்யா : டிராப் ஆகும் 'புறநானூறு' ? | மாற்றுதிறன் குழந்தைகளின் பிரச்னையை பேசும் படம் | ஜாதி கலவரத்தை தூண்டுகிறார் : இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார் | 'மெய்யழகன்' ஆன கார்த்திக் | ஒரு கோடி கேட்டு கார்த்திக் குமார் மானநஷ்ட வழக்கு : சுசித்ராவிற்கு கோர்ட் விதித்த தடை | கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட கல்லூரி மாணவர்கள் சாதனை | நடிகை லைலா கான் கொலை வழக்கு : வளர்ப்பு தந்தைக்கு துாக்கு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பெரும்பாலான நடிகர்கள் இப்போது மாறிவிட்டனர். ஆனால், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனுஷ், இதுவரை சீரியலை விட்டு விலகவில்லை. அவர் தான் சீரியலுக்கு ஒரு முக்கிய ப்ளாஸாக உள்ளார்.
இந்நிலையில், அவருக்கு பல மாதங்களாக சம்பள பாக்கி வைத்ததன் காரணமாக சீரியலை விட்டு விலகுவதாக அண்மையில் முடிவெடுத்துள்ளார். இதனையறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தயாரிப்பு தரப்பினர், சுஜிதா விலகினால் சீரியல் நன்றாகவே இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். எனவே, அவர்கள் சுஜிதாவிடம் சமாதானம் பேசி இதுவரை பேசப்பட்ட சம்பளத்தை விடவும் அதிக தொகையை சம்பளமாக தருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து சீரியலை விட்டு விலகும் முடிவை சுஜிதா கைவிட்டுவிட்டதாக சின்னத்திரை வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது.