நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
சின்னத்திரையின் நம்பர் 1 தொகுப்பாளினி என்று பெயர் வாங்கிய டிடி என்கிற திவ்ய தர்ஷினி, சமீபகாலமாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் கால்மூட்டில் ஏற்பட்ட பிரச்னை அதை தொடர்ந்து நடைபெற்ற அறுவைசிகிச்சை காரணமாக டிடியால் நீண்டநேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. எனவே, தான் முன்பு போல அவர் சின்னத்திரை மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இருப்பினும் அவரது ரசிகர்களுக்கு டிடியின் மீதுள்ள அன்பும், பரிவும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், அண்மை காலங்களில் ஊடகங்களில் தொடர்ச்சியாக பேட்டியளித்து வரும் டிடி, தனக்கு நடைபெற்ற மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். ஒருமுறை டிடியின் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஹீரோயின், டிடியின் உடையை போலவே அணிந்திருந்தாராம். இதனால் அப்செட்டான அந்த நடிகை, உனக்கெல்லாம் இந்த உடையா? என்பது போல் டிடியை எளக்காரமாக பார்த்துவிட்டு, டிடியிடம் வேறு டிரெஸ் இருக்கிறதா? என்று கேட்டுள்ளார். இதனால் டிடி மிகவும் மனம் வருத்தமடைந்தாலும், அந்த நிகழ்ச்சி முழுவதிலுமே அந்த நடிகையை மிகவும் மரியாதையுடன் நடத்தி பேட்டி எடுத்திருக்கிறார். இந்த செய்தியானது தற்போது வெளியில் கசிய, டிடியின் இந்த பெருந்தன்மையான குணத்தை பலரும் பாராட்டி சீக்கிரமாகவே பூரண உடல்நலத்துடன் டிடி கம்பேக் கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.