ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
சின்னத்திரையின் நம்பர் 1 தொகுப்பாளினி என்று பெயர் வாங்கிய டிடி என்கிற திவ்ய தர்ஷினி, சமீபகாலமாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை. அதற்கு காரணம் கால்மூட்டில் ஏற்பட்ட பிரச்னை அதை தொடர்ந்து நடைபெற்ற அறுவைசிகிச்சை காரணமாக டிடியால் நீண்டநேரம் நிற்கவோ, நடக்கவோ முடியாது. எனவே, தான் முன்பு போல அவர் சின்னத்திரை மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இருப்பினும் அவரது ரசிகர்களுக்கு டிடியின் மீதுள்ள அன்பும், பரிவும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில், அண்மை காலங்களில் ஊடகங்களில் தொடர்ச்சியாக பேட்டியளித்து வரும் டிடி, தனக்கு நடைபெற்ற மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். ஒருமுறை டிடியின் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஹீரோயின், டிடியின் உடையை போலவே அணிந்திருந்தாராம். இதனால் அப்செட்டான அந்த நடிகை, உனக்கெல்லாம் இந்த உடையா? என்பது போல் டிடியை எளக்காரமாக பார்த்துவிட்டு, டிடியிடம் வேறு டிரெஸ் இருக்கிறதா? என்று கேட்டுள்ளார். இதனால் டிடி மிகவும் மனம் வருத்தமடைந்தாலும், அந்த நிகழ்ச்சி முழுவதிலுமே அந்த நடிகையை மிகவும் மரியாதையுடன் நடத்தி பேட்டி எடுத்திருக்கிறார். இந்த செய்தியானது தற்போது வெளியில் கசிய, டிடியின் இந்த பெருந்தன்மையான குணத்தை பலரும் பாராட்டி சீக்கிரமாகவே பூரண உடல்நலத்துடன் டிடி கம்பேக் கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.