திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' | தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரையில் பிரபலமானவர் குமரன். இவர் குமார சம்பவம் படத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார். பாலாஜி வேணு கோபால் இயக்கிய இந்த படம் செப்டம்பர் 12ல் ரிலீஸாகிறது. தான் ஹீரோவானது குறித்து பேசியுள்ள குமரன், ''சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பது என் கனவு. இப்போது ஆகிவிட்டேன். நான் எமோஷனலாக இருக்கிறேன். இது என்னுடையை 17 ஆண்டு கனவு. இந்த கனவை நனவாக்கி அனைவருக்கும் நன்றி.
எங்க குடும்பத்துல யாரும் சினிமா பேக்கிரவுண்ட் கிடையாது. அப்பா டீக்கடையில வேலை பார்த்தவரு. ஆனா, அவருக்கு நான் சினிமாவில் ஹீரோ ஆகணும்னு ஆசை இருந்தது. அவர் கனவையும் நனவாக்கி இருக்கிறேன். ஆரம்பத்துல எப்படி சினிமாவுக்கு போகணும்னு தெரியலை. எங்கயோ சுற்றி பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்தேன். ஓரளவு பிரபலம் ஆனேன். இந்த படத்தோட பேரு குமார சம்பவம்.
இது, என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவமும் கூட. பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு போகும்போது சினிமாவுக்கும் இப்படி போகணும்னு நினைச்சிட்டு இருந்தேன், அது நடந்து இருக்கிறது. இந்த பட இயக்குனர் பாலாஜி வேணுகோபால் யுடியூப் நடத்திக் கொண்டு இருந்தபோது, அதுல நடிச்சு இருக்கிறேன். இந்த படத்தை குடும்பத்தோட பார்க்கலாம். முகம் சுளிக்கும் காட்சிகள் இருக்காது'' என்றார்.




