மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான ஹீரோவாக மாறினார் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சொல்லப்போனால். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இன்கெம் இன்கெம் காவாலே என்கிற பாடலும் அதில் இவர்கள் இருவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. இதையடுத்து இந்த ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறியது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி ஐந்தாம் வருடத்தை எட்டியுள்ளது. இதனை இயக்குனர் பரசுராமுடன் சேர்ந்து நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி ராஷ்மிகாவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் நெருங்கிய நட்பில் இருந்து வருகின்றனர் என்றும் காதலிக்கின்றனர் என்றும் கூட சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் சமீப காலமாக பொது வெளியில் இணைந்து வருவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக இருவரும் ஒன்று கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.