'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமான ஹீரோவாக மாறினார் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து அவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் அவருடன் இணைந்து நடித்த கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனாவும் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். சொல்லப்போனால். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற இன்கெம் இன்கெம் காவாலே என்கிற பாடலும் அதில் இவர்கள் இருவரின் நடிப்பும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. இதையடுத்து இந்த ஜோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறியது. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படம் வெளியாகி ஐந்தாம் வருடத்தை எட்டியுள்ளது. இதனை இயக்குனர் பரசுராமுடன் சேர்ந்து நாயகன் விஜய் தேவரகொண்டாவும் நாயகி ராஷ்மிகாவும் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவரும் நெருங்கிய நட்பில் இருந்து வருகின்றனர் என்றும் காதலிக்கின்றனர் என்றும் கூட சொல்லப்பட்டு வரும் நிலையில் இவர்கள் இருவரும் சமீப காலமாக பொது வெளியில் இணைந்து வருவதை தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கீதா கோவிந்தம் படத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவை கொண்டாடுவதற்காக இருவரும் ஒன்று கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.