ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
நடிகர் ரஜினிகாந்த் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு இமயமலை சென்றுள்ளார். அவர் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் வெளியீட்டிற்கு முதல்நாள் கிளம்பினார். பெங்களூரில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய ரஜினி முதலில் ரிஷிகேஷ் சென்று அங்குள்ள கோயில்களில் வழிபட்டார். தொடர்ந்து தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்றார்.
பின்னர் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகளுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
இதையடுத்து இமயமலையை ஒட்டி உள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்றார். பின்னர் 2மணிநேரம் மலையேறி பாபாஜி குகைக்கு சென்று அங்கு தியானம் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்த பயணத்தில் ரஜினியின் ரசிகர் ஒருவர் 55 நாட்கள் நடைபயணமாக இமயமலை வந்து அவரை காண வந்துள்ளார். இதையறிந்த ரஜினி, அவரை சந்தித்து பேசி உள்ளார்.