ஓடிடி-க்கு தயாரான நானியின் 'கோர்ட்' | இந்திய பொழுதுபோக்கு துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலராக உயரும் : பிக்கி தலைவர் கமல் நம்பிக்கை | 2025 தமிழ் சினிமா - காலாண்டு ரிப்போர்ட் | பிளாஷ்பேக் : டி.ராஜேந்தரை ஹீரோவாக்கிய ரஜினி | பிளாஷ்பேக் : ஆதித்தியன் கனவை நனவாக்கிய பாடல் | ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா 'பிளாக்மெயில்'? | 'எம்புரான்' படத்தை எதிர்த்து தமிழ்நாட்டு விவசாயிகள் போராட்டம் | குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? |
நடிகர் ரஜினிகாந்த் நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு இமயமலை சென்றுள்ளார். அவர் நடித்துள்ள ‛ஜெயிலர்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் வெளியீட்டிற்கு முதல்நாள் கிளம்பினார். பெங்களூரில் இருந்து நண்பர்களுடன் இமயமலை பயணத்தை துவக்கிய ரஜினி முதலில் ரிஷிகேஷ் சென்று அங்குள்ள கோயில்களில் வழிபட்டார். தொடர்ந்து தயானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமத்திற்கு சென்றார்.
பின்னர் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். 3000 ஆண்டு பழமையான சுயம்பு மகாவிஷ்ணுவை வழிபட்டார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் சுவாமிகளுடன் இணைந்து தேசிய கொடி ஏந்தி சுதந்திர தினத்தை கொண்டாடினார்.
இதையடுத்து இமயமலையை ஒட்டி உள்ள ஆன்மிக தலங்களுக்கு நடைபயணமாக சென்றார். பின்னர் 2மணிநேரம் மலையேறி பாபாஜி குகைக்கு சென்று அங்கு தியானம் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்த பயணத்தில் ரஜினியின் ரசிகர் ஒருவர் 55 நாட்கள் நடைபயணமாக இமயமலை வந்து அவரை காண வந்துள்ளார். இதையறிந்த ரஜினி, அவரை சந்தித்து பேசி உள்ளார்.