கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா நடிப்பில் 2010ம் ஆண்டு வெளியான படம் 'எந்திரன்'. ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தின் கதை என்னுடையது என்று பலரும் வழக்கு தொடர்ந்தனர். இதில் ஆரூர் தமிழ்நாடன் என்ற எழுத்தாளர் தொடர்ந்த வழக்கு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்னொரு வழக்கும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. எந்திரன் திரைப்படத்தின் கதை மீது உரிமை கோரி கே.கே.சண்முகம் என்ற பாலகங்காதர் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சண்முகம் தாக்கல் செய்த மனுவில் ''ரோபோ அங்கிள்' என்ற பெயரில் 1989ம் ஆண்டு கதை எழுதினேன். இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியுள்ளேன். இந்த கதை விவாதத்தின் போது 2 முறை இயகுனர் ஷங்கர் கலந்து கொண்டார். இதன்பின்னர், என்னுடைய கதையை திருடி 'எந்திரன்' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். எனவே, எனக்கு 2 கோடியே 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 'ரோபோ அங்கிள்' கதையை மனுதாரார் பதிவு செய்யவில்லை. மேலும் ஷங்கர் தரப்பில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் ஏற்புடையதாக இருக்கிறது. அதனால் இந்து வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.