கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனக்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டு நேற்று முன்தினம் தான் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு சென்றார் விஜய். இந்த நிலையில் வெளிநாட்டில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருந்த அஜித்குமார் தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்களுடன் அஜித்குமார் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
துணிவு படத்திற்கு பின் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கயிருப்பதால் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பி இருக்கிறார் அஜித். அதனால் இன்னும் சில தினங்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.