ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
"வாகை சூடவா, அம்மாவின் கைப்பேசி ஆகிய படங்களில், யதார்த்தமான கிராமத்து பெண் வேடத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார், இனியா. ஆனாலும், கோலிவுட், அவர் மீது, பாராமுகம் காட்டியது. இதனால், அதிருப்தியில் இருந்த இனியாவுக்கு, இப்போது, அவரது நடிப்புத் திறமைக்கு தீனி போடும் வகையிலான, செமத்தியான கேரக்டர் கிடைத்துள்ளதாம்."மாசாணி என்ற த்ரில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார், இனியா.
இந்த பட அனுபவம் குறித்து, அவர் அளித்துள்ள பேட்டியில், "மலையாளப் படங்களில் பிசியாக இருந்தபோது, இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தனர். தேதி இல்லாவிட்டாலும், இந்த படத்தின் கதை முழுவதும், என்னைச் சுற்றியே வரும் வகையில், அமைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டேன். புயல், மழை, மின்னல், நடுங்க வைக்கும் காட்சிகளில் நடித்தது, புதிய அனுபவமாக இருந்தது. இந்த படம் வெளியானதும், என் தமிழ் திரையுலக பயணம், சுகமான அனுபவமாக இருக்கும் என, கூறியுள்ளார், இனியா.