சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் | வனிதா மீது தாக்குதல் : வருத்தம் தெரிவித்த பிரதீப் ஆண்டனி | டிச., 1ல் விஷால் 34வது பட பர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியாகிறது | புடிச்சத பண்ணுனா லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் : நயன்தாராவின் ‛அன்னபூரணி' டிரைலர் வெளியானது |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிசியான நடிகராக நடித்து வருபவர் கிச்சா சுதீப். தற்போது தாணு தயாரிப்பில் கன்னடத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எம்என் குமார் என்பவர் சுதீப் மீது தன்னிடம் ஒப்பந்தம் செய்தபடி தனது நிறுவனத்திற்கு படம் நடித்து தராமல் ஏமாற்றி வருகிறார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே சுதீப்பை வைத்து கிட்டத்தட்ட நான்கு படங்கள் வரை தயாரித்தவர் தான். அதனால் இந்த குற்றச்சாட்டு பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து இதுவரை அமைதி காத்த கிச்சா சுதீப், தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் இவ்வளவு நீண்ட காலமாக இந்த சினிமா துறையில் தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. இதற்கு மேல் இந்த பிரச்சனை பற்றி பேசினால் அது நீதிமன்றத்தை அவமதித்தது போல ஆகிவிடும். அதனால் எது உண்மை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு தயாரிப்பாளரான ஹூக்கா ரகுமான் என்பவர் எழுப்பிய குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு, “ஒவ்வொருவரின் குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு தேவை என்றால் தனியாக நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறியுள்ளார்.