Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தவறு செய்திருந்தால் இத்தனை நாட்கள் நீடித்திருக்க முடியாது : சுதீப் பதில்

18 ஜூலை, 2023 - 18:11 IST
எழுத்தின் அளவு:
If-i-had-been-done-wrong-i-can't-stand-here-says-kiccha-sudeep

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிசியான நடிகராக நடித்து வருபவர் கிச்சா சுதீப். தற்போது தாணு தயாரிப்பில் கன்னடத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எம்என் குமார் என்பவர் சுதீப் மீது தன்னிடம் ஒப்பந்தம் செய்தபடி தனது நிறுவனத்திற்கு படம் நடித்து தராமல் ஏமாற்றி வருகிறார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே சுதீப்பை வைத்து கிட்டத்தட்ட நான்கு படங்கள் வரை தயாரித்தவர் தான். அதனால் இந்த குற்றச்சாட்டு பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து இதுவரை அமைதி காத்த கிச்சா சுதீப், தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் இவ்வளவு நீண்ட காலமாக இந்த சினிமா துறையில் தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. இதற்கு மேல் இந்த பிரச்சனை பற்றி பேசினால் அது நீதிமன்றத்தை அவமதித்தது போல ஆகிவிடும். அதனால் எது உண்மை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு தயாரிப்பாளரான ஹூக்கா ரகுமான் என்பவர் எழுப்பிய குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு, “ஒவ்வொருவரின் குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு தேவை என்றால் தனியாக நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நாக சைதன்யா 25வது படத்தை இயக்கும் மஜிலி பட இயக்குனர்!நாக சைதன்யா 25வது படத்தை இயக்கும் ... ஜப்பானில் வசூல் வேட்டை நடத்தும் ரங்கஸ்தலம் ஜப்பானில் வசூல் வேட்டை நடத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
19 ஜூலை, 2023 - 04:20 Report Abuse
NicoleThomson இது காங்கிரஸ் அரசின் வஞ்சம் தீர்க்கும் நேரம் என்பது மாத்திரம் தெரிகிறது .m
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in