தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

மலையாளத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் வெளியாகி வசூலையும் வெற்றியையும் பெற்ற படம் திரிஷ்யம். இதை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். அதற்கு முன்னதாக அவர் சில வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும் திரிஷ்யம் படம் மூலம் முன்னணி இயக்குனர் வரிசைக்கு உயர்ந்தார்.அதைத்தொடர்ந்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட்டு முதல் பாகத்தைப் போலவே அடுத்த வெற்றியை பெற்றது இந்த கூட்டணி.
தொடர்ந்து மூன்றாவதாக ராம் என்கிற படத்திற்காக இணைந்தனர் மோகன்லாலும் ஜீத்து ஜோசப்பும். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா அலை பரவ ஆரம்பித்ததால் இடையில் நிறுத்தப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வரை பாதியிலேயே அப்படியே நிற்கிறது. ஆனால் அதன் பிறகு டுவல்த் மேன் என்கிற இன்னொரு வெற்றி படத்தையும் இந்த கூட்டணி கொடுத்தனர்.
இதை தொடர்ந்து மீண்டும் ஐந்தாவது முறையாக மோகன்லாலும், ஜீத்து ஜோசப்பும் புதிய படத்தில் இணைகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. ஏற்கனவே திரிஷ்யம் படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் மூன்றாம் பாகத்துடன் அந்த கதை முற்றுப்பெறும் என்றும் ஜீத்து ஜோசப் கூறியிருந்தார். ஆனால் இப்போது இவர்கள் இணையும் படம் திரிஷ்யம் 3 அல்ல என்றும் வேறு ஒரு புதிய கதைக்காக என்றும் தெரியவந்துள்ளது.