லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை கடந்ததாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் மேடையில் கூறியதாவது: "கடந்த வருடம் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. நல்ல படம் என்று அங்கீகாரம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அந்த சமயத்தில் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் தான் நடிக்கிறோமா? என கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் பதிலாக போர் தொழில் படம் அமைந்தது. உன் வேலையை நீ சரியாக செய்தால் உனக்கான மரியாதை தானாக வரும்" இவ்வாறு தெரிவித்தார்.