300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை கடந்ததாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் மேடையில் கூறியதாவது: "கடந்த வருடம் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. நல்ல படம் என்று அங்கீகாரம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அந்த சமயத்தில் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் தான் நடிக்கிறோமா? என கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் பதிலாக போர் தொழில் படம் அமைந்தது. உன் வேலையை நீ சரியாக செய்தால் உனக்கான மரியாதை தானாக வரும்" இவ்வாறு தெரிவித்தார்.