ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளிவந்த இந்த படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. உலகளவில் இப்படம் ரூ.50 கோடியை கடந்ததாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் படக்குழுவினர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இப்படத்தின் ஹீரோ அசோக் செல்வன் மேடையில் கூறியதாவது: "கடந்த வருடம் நிறைய படங்களில் ஹீரோவாக நடித்தேன். அந்த படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. நல்ல படம் என்று அங்கீகாரம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அந்த சமயத்தில் எனக்கே என் மீது சந்தேகம் வந்தது. நல்ல படம் தான் நடிக்கிறோமா? என கேள்வி எழுந்தது. ஆனால், அதற்கெல்லாம் பதிலாக போர் தொழில் படம் அமைந்தது. உன் வேலையை நீ சரியாக செய்தால் உனக்கான மரியாதை தானாக வரும்" இவ்வாறு தெரிவித்தார்.