இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், சரிதா,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இசையமைப்பாளர் பரத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மாவீரன் படத்தில் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒளிந்து உள்ளதாக பரவி வந்தது. தற்போது அந்த சர்ப்ரைஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் சிவகார்த்திகேயன் காதில் மட்டும் ஒரு குரல் அடிக்கடி ஒலிக்குமாம். அந்த குரலை கொடுப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதியை முதலில் அணுகியுள்ளனர். அதன்பின் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து அந்த குரல் கொடுக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இறுதியாக யார் அந்த குரல் கொடுத்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ஆனால், இன்று வெளியாகும் மாவீரன் டிரைலரில் அந்த மர்ம குரல் யார் என்று தெரிய வரும் என்கிறார்கள்.