அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நடிகர் விஜய் சமீபத்தில் 10ம், பிளஸ் 2 வகுப்பில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை கவுரவிக்கும் விதமாக சான்றிதழ், ஊக்கத்தொகை வழங்கினார். இதில் விஜய்யின் அரசியல் நோக்கம் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும் அவர் அந்த விழாவில் பேசியது மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
தற்போது விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் இதேபோல் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த தகவலின் படி, விஷால் கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை நடத்தி வருகிறார். அதன் மூலம் பிளஸ் 2 வகுப்பு படித்து முடிக்கும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். அவரின் உதவியால் இப்போது சுமார் 300 பேர் மாணவ, மாணவிகள் கல்லூரியில் படித்து வருகின்றனர். விஜய்க்கு முன்பே இந்த நல்ல செயலை செய்து வரும் விஷால் விஜய் நடத்தியது போல உதவி பெறும் மாணவ, மாணவிகளை அவர்களது பெற்றோர்களுடன் அழைத்து விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.அதில் விஷால் பங்கேற்று மாணவ, மாணவிகள் முன்பு பேச உள்ளார் என்கிறார்கள்.