பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்டி காலனி 2ம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதை தொடர்ந்து அருள்நிதி இப்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக பா.பாண்டி, ஜூங்கா படங்களில் நடித்த நடிகை மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது இதுவரைக்கும் 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.