'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வரலாற்று படங்களை அல்லது புராண படங்களை இரண்டு பாகங்களாக எடுத்து வெளியிட்டாலும் ரசிகர்களிடம் அதற்கு வரவேற்பு கிடைக்கும்,வசூலையும் அள்ளலாம் என இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அப்படித்தான் தமிழில் இதுவரை எடுக்க தயக்கம் காட்டப்பட்டு வந்த பொன்னியின் செல்வன் நாவல் கூட இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு கடந்த வருடம் முதல் பாகமும் இந்த வருடம் இரண்டாம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றன.
இதைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் தனது வட சென்னை, விடுதலை போன்ற படங்களுக்கு இரண்டாம் பாகங்களை உருவாக்கி வருகிறார். அதற்கும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த விதமாக சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என இந்த படம் எடுக்கப்பட்டு வந்த சமயத்திலேயே பிரபாஸிடம் கூறினாராம் இந்த படத்தின் இயக்குனர் ஓம் ராவத்.
அதற்கு காரணம் கைவசம் கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் காட்சிகள் இருப்பதாகவும் இன்னும் காட்சிகளை அதிகரித்து இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றும் கூறியுள்ளார் ஓம் ராவத். ஆனால் பிரபாஸோ இந்தப்படம் ஒரு பாகமாக மட்டுமே வெளியாக வேண்டும். அப்போதுதான் அதற்கான சரியான வரவேற்பு கிடைக்கும் என்று கூறி இரண்டு பாகங்களாக வெளியிட வேண்டும் என்கிற இயக்குனரின் விருப்பத்திற்கு ஆரம்பத்திலேயே தடை போட்டு விட்டாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை இயக்குனர் ஓம் ராவத்தே வெளிப்படுத்தியுள்ளார்.