'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் இயக்குனர் ஜஸ்வர்யா தற்போது நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் வைத்து லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்து வருகிறார் . ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரஜினி சம்மந்தப்பட்ட காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக லால் சலாம் படக்குழுவினர்களுடன் ரஜினி திருவண்ணாமலை சென்றுள்ளார். அங்கு உள்ள ஊசாம்பட்டியில் நேற்று பிற்பகல் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் ரஜினியை காண படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். தனியார் இடம் என்பதால் கூட்டம் கூட வேண்டாம் என்று அவர்களை திருப்பி அனுப்பினர். அடுத்த 3நாட்கள் திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கவுள்ளதால் ரஜினி அடுத்து மூன்று நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி நடிக்கவுள்ளார். இதற்கிடையில்திருவண்ணாமலை அண்ணாமலையாரை ரஜினி தரிசிப்பார் என்கிறார்கள்.