நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் | உதவி செய்பவர்களை காயப்படுத்தாதீர்கள்: 'துள்ளுவதோ இளமை' அபிநய் | 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர் | கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாகும் நிவின்பாலியின் 'சர்வம் மாயா' | உங்க பட ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா லாலேட்டா ? ; ரிலீஸ் தேதியை அறிவிக்க நடிகரின் புதிய யுக்தி | 'மூக்குத்தி அம்மன் 2' படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய் | ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி |
மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகை ஆனர். இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழுக்கு மீண்டும் வந்து விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இதில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார். திடீரென்று அந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகி விட்டதாக கூறப்படுகிறது. பூஜாவின் சமீபகால படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. மேலும் அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்றும், கால்ஷீட் பிரச்னையாலும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக சம்யுக்தா நடிப்பார் என்று தெரிகிறது.
தற்போது மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகியது தொடர்பாக பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது: தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானது உண்மை. ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் 'குண்டூர் காரம்' படத்திலிருந்து நானாகவே விலகிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.