'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகை ஆனர். இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழுக்கு மீண்டும் வந்து விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இதில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார். திடீரென்று அந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகி விட்டதாக கூறப்படுகிறது. பூஜாவின் சமீபகால படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. மேலும் அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்றும், கால்ஷீட் பிரச்னையாலும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக சம்யுக்தா நடிப்பார் என்று தெரிகிறது.
தற்போது மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகியது தொடர்பாக பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது: தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானது உண்மை. ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் 'குண்டூர் காரம்' படத்திலிருந்து நானாகவே விலகிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.