இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தமிழில் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு முன்னணி நடிகை ஆனர். இந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். தமிழுக்கு மீண்டும் வந்து விஜய் ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இதில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறார். திடீரென்று அந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகி விட்டதாக கூறப்படுகிறது. பூஜாவின் சமீபகால படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. மேலும் அவர் அதிக சம்பளம் கேட்கிறார் என்றும், கால்ஷீட் பிரச்னையாலும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டேவுக்கு பதிலாக சம்யுக்தா நடிப்பார் என்று தெரிகிறது.
தற்போது மகேஷ் பாபு படத்தில் இருந்து விலகியது தொடர்பாக பூஜா ஹெக்டே கூறியிருப்பதாவது: தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் 'குண்டூர் காரம்' படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானது உண்மை. ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் 'குண்டூர் காரம்' படத்திலிருந்து நானாகவே விலகிவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.