விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும். இவர்கள் இருவரும் பல திரைப்பட நிகழ்ச்சிகளிலும், தங்களுக்கு நெருங்கிய நண்பர்களின் விழாக்களிலும் அடிக்கடி ஒன்றாக கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலி சகோதரர் மகள் திருமணத்தில் மோகன்லாலும், மம்முட்டியும் அவர்களது மனைவியர் சகிதம் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் இவர்கள் நால்வரும் இணைந்து நிற்பது போன்று பையனூர் ஜெயபிரகாஷ் என்கிற புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
காரணம் இதற்கு முன்னதாக இப்படி இவர்கள் நால்வரும் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அதன்பிறகு இப்போது தான் இவர்கள் நால்வரும் மீண்டும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதால் இந்த இரண்டு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.