'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் மம்முட்டியுடன் கசபா மற்றும் மோகன்லாலுடன் முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை நேஹா சக்சேனா. உத்தர்காண்டை சேர்ந்த இவர் தென்னிந்திய படங்களில் நடிப்பதில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக மலையாள திரையுலகில் இவருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பேப்பட்டி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நேஹா சக்சேனா. இந்த படத்தில் சுல்தானா என்கிற இஸ்லாமிய பெண் கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
இதில் தனது குடும்பத்தை பாதுகாக்க தனி ஒரு பெண்ணாக போராட்டம் நடத்தும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளாராம். இஸ்லாமிய பெண் என்பதால் இஸ்லாமிய முறைப்படி நமாஸ் செய்வது குறித்து படத்தின் ஒளிப்பதிவாளர் மொய்தீனிடம் முறைப்படி கற்றுக்கொண்டு அந்த காட்சிகளில் நடித்துள்ளார். புர்கா அணிந்தபடி தான் நமாஸ் செய்யும் ஒரு புகைப்படத்தையும் தற்போது சோசியல் மீடியாவில் இவர் வெளியிட்டுள்ளார். இதற்கு பெரும்பாலானோர் பாசிட்டிவான கமெண்ட்டுகளை பதிவிட்டு இருந்தாலும் ஒரு சிலர் வழக்கம் போல சர்ச்சை கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த அதா சர்மா மற்றும் பர்ஹானா படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இதுபோன்ற இஸ்லாமிய கதாபாத்திரங்களின் நடித்து பரபரப்பு வளையத்தில் சிக்கினார்கள். நேஹா சக்சேனாவும் இந்த படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.