பரவசம் உள்ள பக்தி பாடல், பலரும் ரசித்த திரைப்பாடல்... பாடி பறந்த பூவை செங்குட்டுவன் வாழ்க்கை பயணம் | பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும். இவர்கள் இருவரும் பல திரைப்பட நிகழ்ச்சிகளிலும், தங்களுக்கு நெருங்கிய நண்பர்களின் விழாக்களிலும் அடிக்கடி ஒன்றாக கலந்து கொள்வது வழக்கம். இந்த நிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற பிரபல தொழிலதிபர் எம்ஏ யூசுப் அலி சகோதரர் மகள் திருமணத்தில் மோகன்லாலும், மம்முட்டியும் அவர்களது மனைவியர் சகிதம் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் இவர்கள் நால்வரும் இணைந்து நிற்பது போன்று பையனூர் ஜெயபிரகாஷ் என்கிற புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
காரணம் இதற்கு முன்னதாக இப்படி இவர்கள் நால்வரும் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு இதேபோன்று இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அதன்பிறகு இப்போது தான் இவர்கள் நால்வரும் மீண்டும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதால் இந்த இரண்டு புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.