தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

நேரம், பிரேமம் போன்ற படங்களின் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்தபட தோல்விக்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் அடுத்து இயக்கும் தமிழ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். வித்தியாசமான காதல் கதைகளத்தில் இந்தப்படம் தயாராக உள்ளதாம்.