'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
நேரம், பிரேமம் போன்ற படங்களின் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கோல்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதில் பிருத்விராஜ், நயன்தாரா நடித்திருந்தனர். இந்தபட தோல்விக்காக ரசிகர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார். இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸ் புத்ரன் அடுத்து இயக்கும் தமிழ் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார் என்று அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். வித்தியாசமான காதல் கதைகளத்தில் இந்தப்படம் தயாராக உள்ளதாம்.