ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

'தி வாரியர்' படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி தனது 20வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார், சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் ஒரு பாடல் காட்சியும் இங்கு படமாகி வருகிறது. இந்த ஷெட்யூலுக்கு பிறகு ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கும். அது வெளிநாட்டில் படமாக இருக்கிறது.
படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் ராம் பொத்தனேனியும், நாயகி ஸ்ரீலீலாவும் மைசூரை சுற்றி பார்க்க கிளம்பி விடுகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.