கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
ராமாயண கதையை மையமாக வைத்து ‛ஆதிபுருஷ்' படம் தயாராகி உள்ளது. இதில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், சீதை கதாபாத்திரத்தில் கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வரும் ஜூன் 16ம் தேதி வெளியாகிறது.
சீதை வேடத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து கீர்த்தி சனோன் கூறியதாவது: அசைவம் சாப்பிட எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் சீதை கதாபாத்திரத்தில் சாத்வீகமாக இருப்பதற்காக அசைவம் உண்பதை படப்பிடிப்பு நடைபெற்ற அனைத்து நாட்களிலும் நிறுத்திவிட்டேன். மாடர்ன் உடைகளையே விரும்பும் நான் படப்பிடிப்பு முடியும் வரை புடவையோடுதான் காட்சியளித்தேன். தீபிகா படுகோனே, அலியா பட் போன்றோரின் போட்டிக்கு மத்தியில் இந்த கதாபாத்திரம் என் கைக்கு வந்தது.
இது போன்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொரு நடிகைக்கும் வாழ்நாளில் எப்போதாவதுதான் அரிதாக கிடைக்கும். சீதை தெய்வீகமாக எப்படி இருப்பார் என்பதை புரிந்து அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நிறைய புத்தகங்களை படித்தேன். சீதை கதாபாத்திரத்தில் நடித்த முந்தைய தலைமுறை நடிகைகளின் படங்களை பார்த்தேன். சீதை கதாபாத்திரம் தெய்வீகமாக காட்சி அளிக்க அனைத்து முயற்சிகளையும் செய்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.