25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும், விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருப்பதை போன்று பாலிவுட்டில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகிய மூவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த மூவரும் திடீரென சல்மான்கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு அதிகாலை 4 மணி வரை நடந்துள்ளது. இதில் அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளனர். அமீர்கான் தனது பிரேக்கை கைவிட்டு மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று சல்மான்கானும், ஷாருக்கானும் கேட்டுக் கொண்டுள்ளனர். மூவரும் இணைந்து ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றும், இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.