கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தமிழ்நாட்டில் ரஜினியும், கமலும், விஜய்யும் அஜித்தும் நண்பர்களாக இருப்பதை போன்று பாலிவுட்டில் சல்மான்கான், ஷாருக்கான், அமீர்கான் ஆகிய மூவரும் நெருக்கமான நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இந்த மூவரும் திடீரென சல்மான்கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரவு 10 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு அதிகாலை 4 மணி வரை நடந்துள்ளது. இதில் அவர்கள் பல விஷயங்கள் குறித்து பேசி உள்ளனர். அமீர்கான் தனது பிரேக்கை கைவிட்டு மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று சல்மான்கானும், ஷாருக்கானும் கேட்டுக் கொண்டுள்ளனர். மூவரும் இணைந்து ஒரு சுற்றுலா செல்ல வேண்டும் என்றும், இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




