கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அந்த கிராமத்தில் எந்த அனுமதியும் பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டதாக அரிட்டாபட்டி பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளனர். இதற்கு முன்பு தென்காசியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் விதமாக குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படப்பிடிப்பை கலெக்டர் நிறுத்தினர். இப்போது மீண்டும் அதுபோன்று ஒரு சர்ச்சையில் கேப்டன் மில்லர் படக்குழு சிக்கி உள்ளனர்.