ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம், 'கேப்டன் மில்லர்'. இதில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், காளி வெங்கட் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். குற்றாலம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி கிராமத்தில் நடைபெற்று வருகிறது. பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்ட அந்த கிராமத்தில் எந்த அனுமதியும் பெறாமல் குண்டு வெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டதாக அரிட்டாபட்டி பாதுகாப்பு சங்கம் சார்பில் புகார் அளித்துள்ளனர். இதற்கு முன்பு தென்காசியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் விதமாக குண்டு வெடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படப்பிடிப்பை கலெக்டர் நிறுத்தினர். இப்போது மீண்டும் அதுபோன்று ஒரு சர்ச்சையில் கேப்டன் மில்லர் படக்குழு சிக்கி உள்ளனர்.