அடுத்த படம் ஜெயிலர் 2 வா? : சந்தானம் அளித்த பதில் | ‛சிறகடிக்க ஆசை' டிவி தொடர் நடிகை தற்கொலை | சரவண விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ‛டியர் ரதி' | 75வது பிறந்தநாள்: எங்கு இருக்கிறார் ரஜினிகாந்த்? | பிளாஷ்பேக் : சம்பளம் வாங்காமல் நடித்த சிவாஜி, பத்மினி, சாவித்திரி | பிளாஷ்பேக் : நிஜ பாம்புடன் துணிச்சலாக நடித்த ஜெயசித்ரா | படையப்பாவின் படிக்கட்டுகள்... : ரஜினி 75, 50 ஸ்பெஷல் | 'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது |

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்க கோருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதேபோல, கடந்த 2016ல் நாடு முழுவதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி நடித்து, இயக்கியுள்ள பிச்சைக்காரன் படத்தின் 2ம் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
இதற்கிடையே வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ.2000 நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் பிச்சைக்காரன் படத்தையும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து படத்தின் கதாநாயகன் விஜய் ஆண்டனி கூறுகையில், ‛இதை மக்களுடைய நல்லதுக்காகத்தான் செய்திருக்கிறார்கள். யாரெல்லாம் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் இது பாதிப்பு. அதாவது பிகிலிகளுக்குத்தான் பாதிப்பு. ஆன்ட்டி பிகிலிகளுக்கு பாதிப்பில்லை. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்' என்று பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடையும் என ஓராண்டுக்கு முன்பே நான் கூறினேன். அது இப்போது நடந்திருப்பது சந்தோஷம். ஒரு கிரியேட்டராக நான் இந்தப் படத்தை எடுக்கவில்லை. மக்களோடு இருந்துதான் இந்த படத்தை எடுத்தேன். இந்த படத்தை இயக்கியவனாக, பலமுறை எடிட் செய்தவனாக இந்த படத்தை பலமுறை பார்த்த பிறகும் எனக்கு கண்ணீர் வருகிறது. முதன்முறையாக மக்கள் பார்க்கும் பொழுது கண்ணீர் வராதா என்ன? நான் நினைத்தது நடந்துள்ளது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுத்திருந்தால் கேவலமாக இருக்கும். ஏனென்றால், அந்த அம்மா செண்டிமெண்ட் மீண்டும் காட்டுவது போல இருக்கும். காதலியை திருமணம் செய்துவிட்டேன். இதெல்லாம் நடந்து விட்டது. இதனால் புதுக்கதையை எடுக்க முடிவெடுத்தேன்.
பிச்சைக்காரன்-3 திரைப்படம் 2025ம் ஆண்டு வெளியாகும். உடனடியாக அந்த திரைப்படத்தை எடுத்துவிட்டால் அதற்கான முழு எதிர்பார்ப்பு இருக்காது. பிச்சைக்காரன்-3 படத்துடைய கதை, முதல் பாகத்தின் தொடர்ச்சியோ, இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியோ அல்ல. அது ஒரு புதிய கதை. அந்த படத்தை நான் இயக்குவேனா என்பது இப்போது தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.