'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகை ஜோதிகா தமிழில் முதன்மை கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வருகிறார். தற்போது புதிதாக ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். குயின்', 'சூப்பர் 30' போன்ற படங்களை இயக்கிய விகாஸ் பால் இயக்கும் புதிய படத்தில் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்து, நடிக்கிறார். இதில் நடிகர் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் மும்பை, லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் நடக்கிறது.
இப்போது இந்த படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் . கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த 'டோலி சாஜா கே ரக்னா' என்ற இந்தி படத்தில் கடைசியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி சினிமாவிற்கு திரும்பியுள்ளார் ஜோதிகா .