பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
சுதீப்தோ சென் என்பவர் இயக்கத்தில் உருவான படம் ‛தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்பட ஐந்து மொழிகளில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்துள்ளது. இப்படம் வெளியாவதற்கு முன்பே வெளியிட அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இப்படம் வெளியானது. அதோடு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்புடன் திரையிடப்பட்டது. ஆனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஓரிரு நாட்கள் திரையிடப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. விமர்சனங்கள், எதிர்ப்புகளை மீறி இப்படம் ரூ.100கோடிக்கும் அதிகமான வசூலை தந்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி படத்துக்கும், அந்த பட குழுவுக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில், அப்பட நாயகியான அடா சர்மா ஒரு விபத்தில் சிக்கியதால் அவர் மீது ஏதேனும் தாக்குதல் நடைபெற்று விட்டதோ என்கிற பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், நான் நன்றாக இருக்கிறேன். இந்த விபத்து குறித்து தகவல் பரவியதும் எனக்கு நிறைய மெசேஜ்கள் வந்தது. பெரிய விபத்து எதுவும் இல்லை. அனைவரும் என்மீது கொண்ட அக்கறைக்கு நன்றி. நானும் படக்குழுவும் நன்றாக இருக்கிறோம் என்று பதிவிட்டு பரபரப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அடா சர்மா.