பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கதக், சல்சா, ஜாஸ், பாலே நடனங்களில் தேர்ந்தவரான அடா சர்மா 2008ல் வெளிவந்த '1920' ஹிந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடப் படங்களில் அறிமுகமானார்.
தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“க்ஷனம்' படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆனதால், தெலுங்கில் 5 படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளேன் என்பதைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எந்த மொழியிலும் நான் ஏதாவது பரீட்சார்த்த முயற்சியில் செய்யும் போது எனக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்கிறீர்கள். தற்போது நான் நடித்து வரும் படங்கள் முந்தையப் படங்களில் இல்லாத ஒன்றாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை வழங்கு நம் இயக்குனர்கள் முன் வரவில்லை. ஆனால், அவரோ தெலுங்கில் ஒரே சமயத்தில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.