ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கதக், சல்சா, ஜாஸ், பாலே நடனங்களில் தேர்ந்தவரான அடா சர்மா 2008ல் வெளிவந்த '1920' ஹிந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடப் படங்களில் அறிமுகமானார்.
தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“க்ஷனம்' படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆனதால், தெலுங்கில் 5 படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளேன் என்பதைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எந்த மொழியிலும் நான் ஏதாவது பரீட்சார்த்த முயற்சியில் செய்யும் போது எனக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்கிறீர்கள். தற்போது நான் நடித்து வரும் படங்கள் முந்தையப் படங்களில் இல்லாத ஒன்றாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை வழங்கு நம் இயக்குனர்கள் முன் வரவில்லை. ஆனால், அவரோ தெலுங்கில் ஒரே சமயத்தில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.