நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான நடிகை அடா சர்மா மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கதக், சல்சா, ஜாஸ், பாலே நடனங்களில் தேர்ந்தவரான அடா சர்மா 2008ல் வெளிவந்த '1920' ஹிந்திப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வெளிவந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பாகவே தெலுங்கு, கன்னடப் படங்களில் அறிமுகமானார்.
தமிழில் 'சார்லி சாப்ளின் 2' படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“க்ஷனம்' படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆனதால், தெலுங்கில் 5 படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளேன் என்பதைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எந்த மொழியிலும் நான் ஏதாவது பரீட்சார்த்த முயற்சியில் செய்யும் போது எனக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்கிறீர்கள். தற்போது நான் நடித்து வரும் படங்கள் முந்தையப் படங்களில் இல்லாத ஒன்றாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகளை வழங்கு நம் இயக்குனர்கள் முன் வரவில்லை. ஆனால், அவரோ தெலுங்கில் ஒரே சமயத்தில் ஐந்து படங்களில் நடித்து வருகிறார்.